வவுனியாவில் மூன்று மாடிக்கட்டிடம் இராணுவத்தினரால் நிர்மாணிப்பு
[2017/04/12]
அண்மையில் (ஏப்ரல் .௦6) வவுனியா போகஸ்வெவ
வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்
தொகுதி வெகு விமர்சையாக திறந்துவைக்கைப்பட்டது.
குறித்த திட்டத்தினை தொழிநுட்பம் மற்றும் அனுபவமிக்க
வன்னி பாதுகாப்பு படை தலைமையக பொறியியல் சேவை படைப்பிரிவு 2
இராணுவத்தினரால் நிறைவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்வி
அமைச்சினால் இத்திட்டத்திற்காக 24.8 மில்லியன் ரூபா நிதியுதவி
வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய கட்டிடத்தை திறந்துவைத்த அதேவேளை இப்பாடசாலை
மாணவர்களுக்கு ஒரு தொகை கற்கை உபகரணங்களும் வழங்கிகைப்பட்டது. இதற்காக
தனியார் நிறுவன நன்கொடையாளர்களால் அனுசரணை வழங்கியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இந்நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள், அதிபர்,
ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான உள்ளூர் வாசிகளும்
கலந்துகொண்டனர.
|