மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 4/26/2017 2:18:12 PM

மீத்தொட்டமுல்லையில் வீடுகளை இழந்த மற்றுமொரு தொகுதியினருக்கு புதிய வீடுகள்

[2017/04/25]

மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்ததன் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் முழுமையாக பாதிக்கப்பட்ட 65 வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌவர மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (25) பிற்பகல் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

முதலாவது கட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்த 30 குடும்பங்களுக்கு அண்மையில் வீடுகள் வழங்கப்பட்டன.
இந்த வீடுகளுக்காக அரசாங்கம் 3920 லட்ச ரூபாவை செலவிட்டுள்ளது.

மேலும் இந்த வீட்டுரிமையாளர்களுக்கு வீட்டுத் தளபாடங்களை கொள்வனவுசெய்வதற்காக வீட்டுரிமையாளர் ஒருவருக்கு தலா இரண்டரை லட்ச ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.

இழந்த வீடுகளுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர் பெறுமதிகூடிய வீடுகளுக்கு மேலதிகமாக நிதியை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வீடுகள் வழங்கும் நிகழ்வில் பங்குபற்றிய ஜனாதிபதி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் வாயிற் கதவின் அருகே சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளியான பெண்மணிக்கு குறித்த வீட்டுக்கான உரிமைப் பத்திரத்தை வழங்கிவைத்தார்.

அமைச்சர்களான சுசில் பிரேமஜயன்த, பாட்டலி சம்பிக்க ரணவக்க, வஜிர அபேவர்த்தன, பிரதியமைச்சர்களான லசந்த அழகியவன்ன, துனேஷ் கன்கந்த, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி_ஜனாதிபதி செய்தி ஊடகம்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்