இலங்கை விமானப்படைக்கு அம்பியுலன்ஸ் வண்டி அன்பளிப்பு
[2017/04/29]
உள்ளக அவசர மருத்துவ தேவைகள் மற்றும் அனர்த்த
நிவாரணங்களின் போது பயன்படுத்தும் வகையில் சகல வசதிகளையும் கொண்ட
அம்பியுலன்ஸ் வண்டி ஒன்று இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பு
செய்யப்பட்டுள்ளது.. குறித்த நிகழ்வு இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இன்று
(ஏப்ரல் . 28) இடம்பெற்றதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும், இங்கு இடம்பெற்ற வைபவத்தின்போது இலங்கை
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களிடம் புதிய அம்பியுலன்ஸ்
வண்டிக்கான சாவியினை ஜப்பான் நாட்டு மக்கள் சார்பாக வருகை தந்திருந்த
பிரதிநிதியினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டதாக
தெரிவிக்கப்படுகின்றது.
|