பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் வெசாக் வலயம் திறந்து வைப்பு
[2017/05/13]
சிரச நமாமி வெசாக் வலயத்தின் மூன்றாம் நாள் நிகழ்வினை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று மாலை
(மே, 12) வைபவ ரீதியாக திறந்து வைத்தார். குறித்த நிகழ்விற்கு வருகை தந்த
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மலர்கள் அளித்து சிறப்பு ஒளியேற்றப்பட்ட
காட்சிகளை ஒளிரச் செய்ததன் மூலம் மூன்றாம் நாள் நிகழ்வினை உத்தியோக
பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
மேலும் அவர், அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள புனித
சின்னங்களையும் வணங்கி வழிபட்டதுடன் கண்களைக் கவரும் வகையில்
அலங்கரிக்கப்பட்டிருந்த வெசாக் விளக்குகள், பாண்டல்கள் மற்றும் பிற
ஒளியேற்றப்பட்ட அலங்காரங்கள் என்பவற்றைப் பார்வையிட்டார்.
மேலும் அவர் இலங்கை கடற்படை மற்றும் நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர் ஆகியோரினரால் அங்கு நிறுவப்பட்டிருந்த அன்னதான வழங்கும்
இடங்களையும் பார்வையிட்டதுடன் அங்கு வருகை தந்திருந்த பகதர்களுடனும்
கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
|