வெள்ளவத்தை அனர்த்த மீட்புப் பணிகளில் இராணுவத்தினர் இணைவு
[2017/05/17]
வெள்ளவத்தை பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுக் கொண்டிருந்த 5 மாடிக்
கட்டிடம் ஒன்று நேற்றைய தினம் (மே, 18) திடீரென இடிந்து வீழ்ந்ததினால்
ஏற்பட்ட அனர்த்த நிகழ்வில் பாதிக்கப்பட்டோரை மீற்கும் பணிகளில் மேற்கு
பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப் பிரிவினைச் சேர்ந்த
படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளம்
குறிப்பிடுகின்றது.
குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 20 பேர் இராணுவத்தினரால்
மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் மீட்பு
நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றது.
|