மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/1/2017 11:00:08 AM

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருகை

[2017/05/27]

தற்போது நிலவுகின்ற வெள்ள அனர்த்த நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில் நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இன்று (மே, 27) கொழும்பு துறைமுகம் வந்தடைதுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பலில் கட்டளைத்தளபதி பிரிஜேஷ் நம்பியார் தலைமையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் வைத்தியர்கள் மற்றும் சுழியோடிகள் உள்ளடங்கலாக 120 கடற்படை வீரர்கள் வருகைதந்துள்ளனர். மேலும் இக்கப்பலில் உலருணவு, குடிநீர் போத்தல்கள், தற்காலிக கூடாரம் மற்றும் மருந்து வகைகள் என்பன கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக, இலங்கைக்கான இந்திய உயரிஸ்தானிகர் அதிமேதகு தரஞ்சித் சிங் சன்ஹு, மேற்கு கடற்படை கட்டளைத்தளபதி ரியர் எட்மிரல் நிராஜா அட்டிகல, கடற்படை தலைமையாக அதிகாரிகள், இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் வருகைதந்திருந்தனர.

     

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்