மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இலங்கை
இராணுவத்தினர்
[2017/05/29]
நாட்டில் இடம்பெற்ற மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம்
ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்தும் இலங்கை
இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்பிரகாரம் அனர்த்த முகாமைத்துவ நிலையம், குறித்த
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மீட்பு
மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக 16 படைப்பிரிவை சேர்ந்த சுமார் 1700 படை
வீரர்கள் உட்பட படையினரின் பிட்ஸ், டப்ளியு எம் இசட்ஸ் மற்றும் பப்பிள் ரக
வண்டிகளுடன் 45 இராணுவ போக்குவரத்து வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக
இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.
நிவித்திகல இலிருந்து கலவனா வீதி வரை சுமார் 26 கி.மீ
நேற்று (மே, 28) சுத்திகரிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (மே, 29) கலவனா பகுதி
சுத்திகரிப்பு செய்யப்பட உள்ளதாகவும், அத்துடன் தெனியாய – மொரவக மற்றும்
புலத்சிங்கள – பஹியன்கல ஆகிய வீதிகளை சுத்திகரிக்கும் பணிகள் தற்பொழுது
நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை நிலவள கங்கையின் அணைக்கட்டினை மேலும்
வலுப்படுத்டும்வகையில் சுமார் 200 படைவீரர்கள் நேற்று (மே, 28) மண்
மூடைஇட்டு பலப்படுத்தியதாகவும் தெரிவித்தார.
கொஸ்கம தொடர்பான
செய்திகள் >>>
|