இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளில்
[2017/05/30]
மேற்கு, தெற்கு, தென்மேற்கு மற்றும் சப்ரகமுவ
மாகாணங்களில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்தும் நிவாரண
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக இலங்கை விமானப்படை அதன் பெல்212, பெல்
412 மற்றும் எம்ஐ 17 உலங்குவானூர்திகள் மற்றும் Y 12 ரக விமானம் மூலம்
உதவிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம் களுத்துறை, புளத்சிங்கலா, அயகம, ரத்னபுர,
பததேகம, வதுரவ, மாத்தரை, தவலாம, மற்றும் யட்டிகம்பியா ஆகிய பாதிக்கப்பட்ட
பிரதேசங்களுக்கு உலருணவு, மருந்துகள், மீட்புப்படகுகள், மற்றும் ஏனைய
உபகரன்கள் இலங்கை விமானப்படையின் 30 வானூர்திகள் மூலம் கொண்டு
செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
சமார் 19000க்கும் அதிகமான சமைத்த உணவு, 14295 கி.கிராம் உலர்
உணவுப்பொருட்கள், 14000 போத்தல் குடிநீர், 8700 பாண் ஆகியன நேற்று (மே, 29)
விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விமானப்படையினரால் 11 நோயாளிகள் மற்றும் இரண்டு
கர்பினித்தாய்மார்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
கொஸ்கம தொடர்பான
செய்திகள் >>>
|