இராணுவத்தினரின் பாரிய முயற்சியினால் வீதித்தடைகள் அகற்றப்பட்டன
[2017/05/31]
தென்மேற்கு பருவமழை காரணமாக முன்னொருபோதும் இல்லாத
வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால் நாட்டின் 15 மாவட்டங்கள் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரத்தினபுரி மாவட்டம் வெள்ளப்பெருக்கு மற்றும்
மண்சரிவு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு கற்பாறைகள் மற்றும் பாரிய
மரங்கள் வீதியில் வீழ்ந்துடன் பல வீதிகள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத
அளவிற்கு வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டது. இதன் காரணமாக நிவாரண
நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதுடன், நிவாரணப்பணிகளை
மேற்கொள்ளும் குழுவினர் கைவிடப்பட்ட மற்றும் தூர பகுதிகளுக்கு செல்வதற்கு
பல சிரமங்களுக்கும் உள்ளாகின்றனர்.
இதேவேளை, கலவான–அஹலவத்த- ரத்தினபுரி பாதை, அயகம–கவரகிரிய
பாதை மற்றும் கலவான–அகலவத்த - இரத்தினபுரி பிரதான வீதி என்பன நவீன
இயந்திரங்களை பயண்படுத்தி இராணுவத்தின் பொறியியலாளர் படையணியினரால் தடைகளை
அகற்றி சுத்திகரிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவ தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மேலும், இலங்கை இராணுவத்தின் வைத்திய படைப்பிரிவினர்
களுத்துறை, புளத்சிங்கலா, பஹியங்கலா, கஹதுவ மற்றும் காலி பிரதேசங்களில்
பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்கிவருவதுடன்,
பாதிக்கப்பட்ட பெரும்பாலான பல வீதிகள் போக்குவரத்தினை மேற்கொள்ளும் வகையில்
தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான்
செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொஸ்கம தொடர்பான
செய்திகள் >>>
|