விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும்
உதவி
[2017/05/31]
அனர்த்தம் ஏற்பட்ட நாள் முதல் இன்றுவரை,
பாதிக்கப்பட்டவர்களுக்கு விமானப்படையினர் தொடர்ந்தும் தமது வானூர்திகளை
பயன்படுத்தி மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணப்பணிகளை மேற்கொண்டு
வருவதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம் இலங்கை விமானப்படையின் எம் ஐ-17, பெல் -212
மற்றும் பெல்-412 ரக உலங்குவானூர்திகளை பயன்படுத்தி புளத்சிங்கலா, பெள்ளன,
பததேகம மற்றும் இரத்தினபுரி, ஆகிய நிவாரண நிலையங்களுக்கு சுமார் 39,266
க்கும் அதிகமான சமைத்த உணவு, 5206 கி.கிராம் உலர் உணவுப்பொருட்கள், 4037
போத்தல் குடிநீர், மருந்துகள், , மற்றும் ஏனைய உபகரன்கள்
விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நாட்டில் நிலவும் மோசமான வானிலையின் காரணமாக
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை
விமானப்படையினர் தொடர்ந்தும் தேவையான உதவிகளை வழங்கி வருவதாக
தெரிவிக்கின்றனர்.
கொஸ்கம தொடர்பான
செய்திகள் >>>
|