நிவாரணப் பொருட்களுடன் வருகை தந்த மூன்று சீன கப்பல்கள் தாயாகம்
திரும்பின.
[2017/06/04]
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான
நிவாரணப்பணிகளுக்கு உதவியளிக்கும் வகையில் நிவாரணப் பொருட்கள் சகிதம்
இலங்கைக்கு கடந்தமாதம் (மே, 31) வருகை தந்த சீன இராணுவ கடற்படைக்குச்
சொந்தமான “சாங் சுன்”,”ஜிங் சௌ”, “சஓ ஹு” ஆகிய கப்பல்கள் அண்மையில் (ஜூன்,
03 ) தாயாகம் திரும்பின.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதிகளை
வழங்குவதற்காக 10 சிறிய படகுகள் மற்றும் ஐந்து மருத்துவ குழுக்களுடன்
குறித்த கப்பல்களில் வருகை தந்த சீன கடற்படையினர் இலங்கை கடற்படையினருடன்
இணைந்து நிவாரண மற்றும் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுட்டமை குறிப்பிடத்தக்கது.
|