பாகிஸ்தானிய கடற்படை தளபதி பாதுகாப்பு படைகளின் பிரதாணியுடன் சந்திப்பு
[2017/06/12]
பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ்
அவர்கள் பாதுகாப்பு படைகளின் பிரதாணி எயார் சீப் மாஷல் கோலித குணதிலக
அவர்களளை அவரின் காரியாலயத்தில் வைத்து இன்று (ஜூன், 12) சந்திப்பொன்றை
மேற்கொண்டுள்ளார்.
இச்சந்திப்பின் போது பாதுகாப்பு படைகளின் பிரதாணி
பாகிஸ்தானிய கடற்படை தளபதி ஆகியோருக்கிடையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான்
ஆகிய நாடுகளுக்கிடையேயான இராணுவ வரலாறு மற்றும் நீண்டகாலமாக நிலவிவந்த
நட்புறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், அதனை எதிர்காலத்தில்
மேலும் வலுவூட்டுவதன் தேவை குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில்
இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
|