மயிலடி மீன்பிடி துறைமுகம் மற்றும் நிலங்கள் விடுவிக்க தீர்மானம்
[2017/07/02]
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் எதிர் வரும் (ஜூலை,
03) திங்கட் கிழமை மயிலடி மீன்பிடி துறைமுகம் உட்பட 54 ஏக்கர் இடம்
விடுவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம், மயிலடி பிரதேசத்தில் இருந்து
இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்கு வந்து
குடியிருக்க முடியும் என்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை யாழில் இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான
பிரச்சினையை கவனத்தில் கொண்டு 2017 ஏப்ரல் 7ஆம் திகதி யாழ் பாதுகாப்பு
படையினரால் உரணி பிரதேசத்திலுள்ள 35 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. |