மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/12/2017 4:58:06 PM சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

[2017/07/12]

சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் முறையான சவால்கள் 2017 எனும் தொனிப்பொருளில் அமைந்த படைப்பிரிவுகளின் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ஆகியோருக்கான இரண்டு நாட்களைக் கொண்ட விழிப்புணர்வு கருத்தரங்கு அண்மையில் இடம்பெற்றது.

சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் அவற்றின் நடைமுறை அம்சங்கள் தொடர்பாக அதிகாரிகாரிகளுக்கு விரிவான விளக்கமளிக்கும் வகையில் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகளான திரு. சந்தன ஜெயவர்த்தன மற்றும் திரு. கொன்ஸ்டான்டிநோஸ் மோர்டோபௌலஸ் ஆகியோர் கலந்துகொண்டு குறித்த விடயம் தொடர்பாக விளக்கமளித்தனர்.

இரு நாட்கள் நடைபெற்ற இக்கருத்தரங்கில் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் படைப்பிரிவுகளின் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட 25 அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்