ஜப்பானிய கடற்படைக் கப்பலைப் பார்வையிட
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் விஜயம்
[2017/07/21]
மூன்று நாட்கள் உத்தியோக
பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானிய
கடற்படைக்குச் சொந்தமான "இசுமோ" மற்றும் "சசணமி " ஆகிய இரு கடற்படை
கப்பல்களை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன்
விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில
வைத்தியரத்ன ஆகியோர் விஜயம் செய்தனர்.
குறித்த கப்பலுக்கு வருகை
தந்த அதிதிகளை கப்பலின் கட்டளைத்தளபதிகள் உள்ளிட்ட ஜப்பானின் முக்கிய
பிரமுகர்கள் வரவேற்றதுடன் அவர்களுக்கு உயர் கடற்படை மரியாதைகளும்
வழங்கப்பட்டன. பின்னர் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுக்கு
கப்பலின் தொழிநுட்ப விடயங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக கப்பலின்
அதிகாரிகளினால் விரிவான விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், குறித்த நிகழ்வினை
நினைவு கூறும் வகையில் பரஸ்பரம் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கைக்கான
ஜப்பானிய தூதுவர் அதிமேதகு கெனிச்சி சுகனுமா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல்
ரவீந்திர விஜேகுனரத்ன ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் புகைப்படங்களை பார்வையிட >>
|