துருக்கிய தூதுவர் பாதுகாப்புச்
செயலாளருடன் சந்திப்பு
[2017/07/28]
துருக்கி நாட்டின்
இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு துங்கா ஒஸ்சுஹாதர் மற்றும் பாதுகாப்பு
செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான
சந்திப்பொன்று இன்று (ஜூலை, 28) இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சில்
இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது துருக்கிய தூதுவர் மற்றும்
பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த
விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மேலும் இச்சந்திப்பினை
நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
அத்துடன் குறித்த சந்திப்பில் துருக்கி தூதரகத்தின் மூன்றாம் செயலாளர்
திருமதி. நஸான் டெனிஸ் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. |