பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2017/08/09]
இலங்கைக்கான பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு.
ரியாஸ் ஹமிதுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன்
விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 09) பாதுகாப்பு அமைச்சில் வைத்து
சந்தித்தார்.
குறித்த சந்திப்பின் போது பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர்
மற்றும் பாதுகாப்புச் இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையே இருதரப்பு
முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று
இடம்பெற்றதுடன், இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்
சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் பங்காளதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு
ஆலோசகர் கொமொடோ அஸ்லம் பர்வேஷ் அவர்களும் கலந்துகொண்டார்.
|