பொதுமக்களுக்கு சொந்தமான காணி
இராணுவத்தினரால் விடுவிப்பு
[2017/08/16]
கிளிநொச்சி - பாதுகாப்பு
படைத் தலைமையகம் மற்றும் ஏனைய பிரிவுகளினால் பயன்படுத்தப்பட்டுவந்த சுமார்
2332 ஏக்கர்ஸ் 01 ரூட் மற்றும் 25.2 பேர்ச்சஸ் கொண்ட ஐந்து காணிகள் காணி
உரிமையாளர்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கத்திடம் நேற்று (ஆகஸ்ட்,15)
கையளிக்கப்பட்டது.
இதற்கமைய, சுமார் 2290
ஏக்கர்ஸ் 03 ரூட்ஸ் மற்றும் 17.6 பேர்ச்சஸ் கொண்ட காணிகள் முல்லைத்தீவு
மாவட்ட ஒட்டுசுட்டான் பகுதி வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கத்திடமும், 02
ஏக்கர்ஸ் 01 ரூட் மற்றும் 17.6 பேர்ச்சஸ் கொண்ட காணிகள் கிளிநொச்சி மாவட்ட
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கத்திடமும், 38 ஏக்கர் 01 ரூட் மற்றும் 05
பேர்ச்சஸ் கொண்ட இரண்டு காணிகள் கண்டவெளி பிரதேச செயலாளரிடமும் காணி
உரிமையாளர்களிடம் கையளிக்கும் வகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய
மிதமான சுமார் 3 ரூட்ஸ் மற்றும் 25 பேர்ச்சஸ் கொண்ட காணிகள் கராச்சி பிரதேச
செயலாளரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு முன்பதான
பலநிகழ்வுகளில் பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்டுவந்த காணிகள் காணி
உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான
செய்திகள் >>
யாழ் குடாநாட்டில் இடம் பெயர்ந்தவர்களுக்காக புதிய வீடுகளை அமைத்துக்
கொடுக்கும் பணியில் இராணுவம்
|