ஜப்பானிய கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை
ஜப்பானிய கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை
[2017/08/21]
ஜப்பானிய கடற்படைக்குச் சொந்தமான "அமகிரி" எனும் கடற்படை
கப்பல் உத்தியோக நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட், 21)
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பானிய கப்பலை
இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.
இலங்கையில் தரித்திருக்கவுள்ள இக்கப்பல் சிப்பந்திகள்
இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பலான "சமுதுர"வுடன் இணைந்து
கூட்டுப்பயிற்சிகள் சிலவற்றில் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.