‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2017’ அதன்
இரண்டாவது நாளில்
[2017/08/29]
நேற்றைய
தினம் ஆரம்பமான 7வது கொழும்பு பாதுகாப்பு மாநாடு-2017 இன் முதல் நாள்
அமர்வுகள் வெற்றிகரமாக நிறைவுற்றது. அதன் இரண்டாம் நாள் அமர்வுகள்
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப கேட்போர்கூடத்தில் இன்று
காலை ஆரம்பமாகியது. “வன்முறை மிக்க தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல்: உலகளாவிய
போக்குகள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இம்மாநாட்டின் முதல் நாள்
அமர்வில் 'வன்முறை தீவிரம், வன்முறை தீவிரவாதத்தை முறியடித்தல்', "வன்முறை
தீவிரத்தை எதிர்கொள்வதில் ஆயுதப் படைகளின் வகிபாகம்' உள்ளிட்ட பல உப
தலைப்புக்களில் 13 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு நிபுணர்கள் தமது
கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இரண்டாம் நாளான இன்று மேலும்
14 பாதுகாப்பு நிபுணர்கள் தமது கருத்துக்க்களை பரிமாரிக்கொள்ளவுள்ளனர்.
மேலும் நான்கு அமர்வுகளைக்கொண்ட குழு நிலை கருத்தாடல்களும் இன்றையதினம்
இடம்பெறவுள்ளது. அத்துடன் இன்று மாலை பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழா
இடம்பெறவுள்ளது.
அத்துடன் விழா நிறைவுக்கு
முன்னர் வெளிநாட்டு விவகார அமைச்சின் செயலாளர் திரு. பிரசாத் காரியவசம்
அவர்களினால் இவ்விழா தொடர்பான அறிக்கை உறுதிப்படுத்தும் ஆக்கபூர்வமானவ உரை
நிகழ்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செயதிகள் >>
|