போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு அமெரிக்க இராணுவ தூதுக்குழு அஞ்சலி
[2017/08/31]
பத்தரமுல்லையில் அமைந்துள்ள முப்படையினரது நினைவு
துாபிக்கு அமெரிக்க இராணுவ தூதுக்குழுவினர் நேற்று (ஆகஸ்ட், 30) தமது
அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். அண்மையில் நிறைவுற்ற “கொழும்பு பாதுகாப்பு
மாநாடு – 2017” இல் கலந்துகொள்ளும் வகையில் அவுஸ்திரேலியாவிலுள்ள அமெரிக்க
இராணுவ பசுபிக் கட்டளைகள், வடக்கு - துணை கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல்
ரோஜர் ஜே நோபல் தலைமையில் வருகைதந்த 5 உறுப்பினர்களைக் கொண்ட
தூதுக்குழுவினரே இவ்வாறு அஞ்சலிகளை செலுத்தியுள்ளதாக இராணுவத்தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இத்தூதுக்குழுவினருடன் வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்க
துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் அவர்களும் மலர் வலையம் சாத்தி மரியாதை
மற்றும் அஞ்சலிகளையும் செலுத்தியுள்ளார.
|