2017 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு
பயிற்சி' நடவடிக்கை உத்தியோக பூர்வமாக நிறைவு
[2017/09/25]
இலங்கை இராணுவத்தினரால்
ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு
பயிற்சி VIII - 2017' மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் நேற்று (செப்டெம்பர்,
24) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. குறித்த இப் போர் பயிற்சி தொடர்ச்சியாக
8வது முறையாகவும் இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
மூன்று வார காலப்பகுதிகளைக்
கொண்ட இப்போர் பயிர்சி இம்மாதம் 03ம் திகதி முதல் கிழக்கு பிராந்தியத்தில்
முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கள முனை போர் பயிற்சியில்
2675 முப்படை வீரர்களும் 13 நாடுகளைச் சேர்ந்த 69 வெளிநாட்டு படை வீரர்களும்
கலந்து கொண்டனர்.
இக்களமுனை தாக்குதல்
பயிற்சியின்போது, எதிரிகளின் மறைவிடங்கள் மீது கடல் மற்றும் தரைவழி ஊடான
கூட்டுத் தாக்குதல் பயிற்சிகள் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில்
இடம்பெற்ற அதேவேளை விமான கடத்தல் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும்
செய்முறைப் பயிற்சிகள் மத்தள விமான நிலையத்திலும் இடம்பெற்றன. மேலும், போலி
மீட்பு நடவடிக்கைகள் கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் வெள்ளிக்கிழமையன்று
இடம்பெற்றது.
நிறைநாள் வைபவத்தில் இராணுவ
அதிகாரிகளின் பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்கள் கலந்து கொண்டு
பயிற்சியில் பங்குபற்றிய படை வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தார.
தொடர்பான செயதிகள் >>
|