மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/29/2017 3:38:07 PM வவுனியா மருத்துவ கட்டிடம் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

வவுனியா மருத்துவ கட்டிடம் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

[2017/09/29]

இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்துடன் மருத்துவ சேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு கட்டிடம் அண்மையில் (செப்டெம்பர்,24) பொதுமக்கள் பாவனைக்கென திறந்து வைக்கப்பட்டது. வவுனியா பிரதேசத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கான காரியாலய தொகுதி இவ்வாறு வைபவ ரீதியாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் வைத்திய வைத்தியர் ராஜித சேனாரத்ன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதிதாக திறந்து வைக்கப்பட்ட இக் கட்டிடத்தொகுதியின் நிர்மாணப்பணிப்பதற்கான நிதியுதவியினை ஜெனீவாவை தளமாக கொண்ட எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா நோய்களுக்கு எதிரான உலகளாவிய நிதியம் வழங்கி வைத்தது. அத்துடன் இக்கட்டிடத்தின் நிர்மாணப்பணிகள் வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள 2ஆவது பொறியியலாளர் சேவை படையினரால் முன்னெடுக்கப்பட்டது.


இக் கட்டிடத்தொகுதி திறப்புவிழா நிகழ்வில் 21ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரால் டபிள்யூஆர்பி சில்வா, நன்கொடை நிறுவன பிரதிநிதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், சுகாதார பணிமனை அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும், இதுபோன்ற மருத்துவ தேவைகளுக்காக இராணுவத்தின் நிபுணத்துவம் மற்றும் இராணுவ வீரர்களின் உடலூதியம் ஆகியவற்றின் மூலம் இலவசாமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் யாழ் குடா பகுதியின் வட்டுக்கோட்டை, ஊர்காவற்துறை மற்றும் மரதன்கேணி ஆகிய பிரதேசங்களிலும் கிளிநொச்சியிலும் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்