இந்து சமுத்திர பிராந்திய பணிகளில்
ஈடுபட்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சருடன் சந்திப்பு
[2017/10/10]
இந்து சமுத்திர பிராந்திய
பணிகளில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி ரியர் அட்மிரல்
டிடியர் பியடென் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை
இன்று (ஒக்டோபர், 10) சந்தித்தார்.
இதன்போது பிரான்ஸ் நாட்டின்
இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு. ஜீன்-மரின் ஸ்சுஹ் அவர்களும்
கலந்துகொண்டார்.
பாதுகாப்பு அமைச்சில்
இடம்பெற்ற இச்சந்திப்பின் போது பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி மற்றும்
இராஜாங்க அமைச்சர் ஆகியோரிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்
தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மேலும் இச்சந்திப்பினை
நினைவு கூறும்வகையில் அவர்களிடையே நினைவுச்சின்னங்களும்
பரிமாறிக்கொள்ளப்பட்டன.
|