மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 12/8/2017 3:54:50 PM பாதுகாப்பு அமைச்சில் ஆளுமை விருத்தி தொடர்பான விரிவுரை

பாதுகாப்பு அமைச்சில் ஆளுமை விருத்தி தொடர்பான விரிவுரை

[2017/12/08]

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் ஆளுமை விருத்தி தொடர்பான விரிவுரை ஒன்று இன்று காலை (டிசம்பர். 08) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் அத்தநாயக எம் ஹேரத் அவர்களால் இவ்விஷேட விரிவுரை நிகழ்த்தப்பட்டது. இதன்போது, பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி சங்கத்தினால் அமைச்சில் பணிபுரியும் பணியாளர்களின் பிள்ளைகள் ஐவர் தேர்ந்தெடுக்கப்பட்டு` ஏ ஐ ஏ காப்புறுதி நிறுவனத்தின் அனுசரணையுடன் கல்விப்புலமைப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மேலதிக செயலாளர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான அமைச்சின் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்