மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/11/2018 12:54:09 PM தென் பிராந்திய கடற்பரப்பில் மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினர் விரைவு

தென் பிராந்திய கடற்பரப்பில் மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினர் விரைவு

[2018/01/11]

தென் பிராந்திய கடற்பரப்பில் மீன்பிடிப் படகொன்று, வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பல் ஒன்றுடன் மோதியுள்ளது. இவ்வாறு மோதியதில் விபத்துகுள்ளான மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை இரவு (ஜனவரி, 09) விரைந்து செயற்பட்டுள்ளனர்.

ஏழு மீனவர்களுடன் ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இம்மாதம் முதலாம் திகதி புறப்பட்டுச்சென்ற "நதீஷா II" என்ற பலநாள் மீன்பிடிப்படகு, “எம்வி க்லோவிஸ் கேப்டன்” எனும் வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணித்துகொண்டிருக்கும் வேளையில் இவ்வாறு மோதி விபத்துகுள்ளகியதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றது.

தெய்வேந்திர முனை கடற்பரப்பில் இருந்து 13 கடல்மைல் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதற்காக கடற்படையின் இரண்டு அதிவேக தாக்குதல் படகுகள் (P 492 மற்றும் P 480) மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. மீனவர்களில் இருவர் கப்பலின் சிப்பாய்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை கடற்படையினரின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைளின்போது மேலும் ஒருவரை காப்பாற்றப்பட்டுள்ளதுடன், பலியான இருவரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவர்கள் விரைவாக காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு கராபிட்டிய போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சுகவீனம் காரணமாக மரணமடைந்த மீனவரின் பூத உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், காணாமற்போன மீனவரை தேடும் நடவடிக்கையினை தொடர்ந்தும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்