முல்லைத்தீவு பிரதேசத்தில் பார்வைக்
குறைபாடுள்ளவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி
[2018/01/14]
அண்மையில் இலங்கை
இராணுவத்திர் முல்லைத்தீவு பிரதேச மக்களின் நலன்கருதி இலவச கண் சிகிச்ச்சை
முகாம் ஒன்றினை நடாத்தியுள்ளனர். முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, இம்மாதம் 10ஆம் மற்றும் 11
ஆம் திகதிகளில் முல்லியவெளி வித்தியானந்த வித்தியாலய வளாகத்தில்
இடம்பெற்றுள்ளது.
ஜோர்ஜ் குணரத்ன கண்
பரிசோதகர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இக் கண்சிகிச்சை முகாமிற்கு 250
க்கும் அதிகமான பயனாளிகள் கலந்துகொண்டதுடன், அவர்கள் கண் பரிசோதனைக்கு
உட்படுத்தப்பட்டு அவர்களில் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு சுமார்
875,000.00 ரூபாய் பெறுமதியான மூக்குக்கண்ணாடிகளும் வழங்கிவைக்கபட்டதாக
இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|