விமானப்படையின் இரண்டு புதிய உற்பத்தி
நிலையங்கள் திறந்து வைப்பு
[2018/01/26]
இலங்கை விமானப்படையின்
இரண்டு புதிய உற்பத்தி நிலையங்கள் நேற்று (ஜனவரி 25) கோலாகலமாக திறந்து
வைத்துவைக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் புதிதாக
நிறுவப்பட்ட இறப்பர் தும்பு மெத்தை உற்பத்தி நிலையம் மற்றும் காகிதக்கழிவு
மீள் சுழற்ச்சி நிலையம் ஆகியன விமானப்படை தளபதி எயார் மாஷல் கபில ஜயம்பதி
அவர்களால் இங்கு இடம்பெற்ற வைபவத்தின்போது திறந்து வைத்துவைக்கப்பட்டுள்ளது.
விமானப்படையினருக்கு இறப்பர்
தும்பு மெத்தை மற்றும் காகித உற்பத்திகளை வழங்கிவைக்கும் நோக்கில் இவ் இரு
புதிய உற்பத்தி நிலையங்களும் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இந்நிகழ்வில், விமானப்படை
அதிகாரிகளின் பிரதிப் பிரதானி, ஏயார் வைஸ் மாஷல் ஏ எம் டி சொய்சா உட்பட
சிரேஷ்ட இலங்கை விமானப்படையின் அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள்
பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
|