கிராண்ட்பாஸ் கட்டிட சரிவு மீட்பு பணிகளில் இராணுவம்
[2018/02/15]
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் உள்ள கட்டிடம் ஒன்று
புதன் கிழமையன்று ( பெப்ரவரி,14) இடிந்து வீழ்ந்ததை அடுத்து அங்கு மீட்பு
பணிகளில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது
படைப் பிரிவின் படைவீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த மீட்பு பணிகள் இராணுவ தளபதி அவர்களது
பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படுவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கோர சம்பவத்தினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன்
பலருக்கு காயங்களும் ஏற்பட்டன. மேலும்,குறித்த பகுதியில் தொடர்ந்தும்
மீட்புப் பணிகள் முன்னேடுக்கப்பட்டுவருகின்றது.
|