குத்துச்சண்டை போட்டியில் இராணுவ வீரர்கள்
சாம்பியன்
[2018/07/09]
இலங்கை குத்துச்சண்டை
வீரர்கள் சங்கம் நடாத்திய இடைநிலை ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
போட்டியில் இலங்கை இராணுவ குத்துச்சண்டை வீரர்கள்
8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
அண்மையில் (ஜூலை,
07) றோயல் மாஸ் அரங்கில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் மாஸ் சிலிம் லைன்
மற்றும் பொலிஸ் கழகத்தை தோற்கடித்ததன் மூலம் இத் தங்கப் பதக்கங்களை
தமதாக்கியுள்ளனர்.
இலங்கை இராணுவ குத்துச்சண்டை
வீரர்கள், 10 போட்டிநிகழ்வுகளில்
பங்கேற்று 8 நிகழ்வுகளில் சாம்பியன்
பட்டத்தை வென்றுள்ளதுடன், இவ்வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும்
வென்றுள்ளனர். |