வறட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர்
வழங்கிவைப்பு
[2018/07/26]
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள
கோப்பாய் பகுதி இராணுவத்தினர் அப்பகுதியில் வறட்சி காலநிலை காரணமாக குடிநீர்
தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை
முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் சுமார்
1100க்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அண்மையில் (ஜூலை,
23) இத்திட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் வீதி ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள
தண்ணீர் டாங்கிகள் மற்றும் இப்பிரதேச மக்கள் கொண்டுவரும் ஏனைய நீர்
கொள்கலன்கள் என்பனவற்றில் நீர் நிரப்பி குடிநீர் வசதிகளை வழங்கிவருகின்றனர்.
|