சேவா வனிதா பிரிவினால் தானம் வழங்கும்
நிகழ்வு ஏற்பாடு
[2018/08/29]
களுத்துறை உக்பேபாத இஸிபதான
அரண்ய சேனசனயவின் மகா சங்கத்தில் வசிப்போருக்காக பாதுகாப்பு அமைச்சின் சேவா
வனிதா பிரிவினால் தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று நேற்று (ஆகஸ்ட், 28)
ஏற்பாடுசெய்யப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் சேவா
வனிதா பிரிவின் தலைவி திருமதி. சாலினி வைத்தியரத்ன அவர்களின் தலைமையில்
இடம்பெற்ற இந்நிகழ்வுவில், திருமதி. சாலினி வைத்தியரத்ன அவர்கள் மத
அனுஷ்டானங்களில் ஈடுபட்டதுடன், அரண்ய சேனசனய மகா சங்கத்தினருக்கு “பிரிகர”
எனும் தானம் வழங்கும் நிகழ்வையும் மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், பாதுகாப்பு
அமைச்சின் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.
|