ஆசிய லொஜிஸ்டிக் போரம் நிகழ்வில்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
[2018/09/04]
பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் ஆசிய லொஜிஸ்டிக் போரத்தின்
அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இரு நாட்களைக்
கொண்ட மாநாடு இன்று காலை (செப்டெம்பர்,04)
சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமானது.
தென் ஆசிய பிராந்தியத்தில்
சரக்கியல் (லொஜிஸ்டிக்) தொழிற்துறை பங்குதாரர்கள் ஒன்று சேர்ந்து தங்கள்
அறிவை அதிகரிக்கவும் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொழிற்துறையை மேம்படுத்தும்
வகையிலும் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்தனர்.
இந்நிகழ்வில், நிறுவன
தலைவர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
|