குப்பை மேட்டு தீயைக் கட்டுப்படுத்த
படையினர் விரைவு
[2018/09/05]
கொழும்பு மாநகர சபையின்
தீயணைப்பு படையினருடன் முப்படை வீரர்கள் ஒன்றிணைந்து கொழும்பு புளுமென்டல்
குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயினை நேற்று (செப்டம்பர், 04)
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்துவது
தொடர்பான அவசர நிலைமையினை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்னர்,
முப்படை வீரர்கள் தீயணைப்பு படையினருடன் இணைந்து மேலும் பலபகுதிகளுக்கு தீ
பரவாது கட்டுப்படுத்தியுள்ளனர்.
|