மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/17/2018 12:21:10 PM டட்லி சேனநாயக்கா அவர்களின் ஞாபகார்த்த பேருரையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கலந்து சிறப்பிப்பு.

டட்லி சேனநாயக்கா அவர்களின் ஞாபகார்த்த பேருரையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கலந்து சிறப்பிப்பு.

[2018/09/15]

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற டட்லி சேனநாயக்க அவர்களின் வருடாந்த ஞாபகார்த்த பேருரை நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று (செப்டம்பர், 14) கலந்து சிறப்பித்துள்ளார்.

இந்நிகழ்வு, டட்லி சேனநாயக்க அறக்கட்டளையாகத்தினால் 18ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது லிபரல் இன்டர்நேஷனல் அமைப்பின் தற்காலிக செயலாளர் நாயகம், கோர்டன் மேக்கீ அவர்கள் அதிதி உரையினை நிகழ்த்தினார்.

இதன்போது, டட்லி சேனநாயக்க அறக்கட்டளையாகத்தின் தலைவரும், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சருமான கௌரவ. டீ எம் சுவாமிநாதன் அவர்களும் வருகைதந்திருந்தார்.

நாட்டின் இரண்டாவது பிரதமராக பதவி வகித்த டட்லி ஷெல்டன் சேனாநாயக்க அவர்கள், ஏப்ரல் 1973 ஆண்டு, அவரது மரணத்திற்கு முன்னர் மூன்று தடவைகள் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில், விஷேட விருந்தினர்கள் மற்றும் மறைந்த பிரதமரின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்