மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 3/1/2019 2:44:36 PM இயந்திர வாள்களை பதிவு செய்தல் தொடர்பான விஷேட அறிவித்தல்

இயந்திர வாள்களை பதிவு செய்தல் தொடர்பான விஷேட அறிவித்தல்

[2019/03/01]

இயந்திர வாள்களின் பதிவு நடவடிக்கைகள் மார்ச் 15ஆம் திகதிவரை நீடிப்பு.

தற்பொழுது நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் (Chainsaw Machines) பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 2019 மார்ச் மாதம் 15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய அரச, அரச சார்பு , தனியார்துறை நிறுவனங்களினால் அல்லது தனி நபர் ஒருவரினால் பயன்படுத்தும் சகல இயந்திர வாள்களும் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இம்மாதம் (மார்ச்) 15ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை பதிவு செய்து அவற்றுக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் உத்தரவிற்கமைய பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்ட மேற்படி தீர்மானத்திற்கமைய இந்த பதிவு நடவடிக்கை 2019 பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் பெப்ரவரி, 28ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையிலே மேலும் 15 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

காடுகள் அழிக்கப்படுவதனை கட்டுப்படுத்தல், இயந்திர வாள்களைப்பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வியாபாரத்தை நிறுத்துதல் மற்றும் மரங்கள் வெட்டப்படுவதனை மட்டுப்படுத்துதல் போன்றவைககளே இதன் நோக்கமாகும்.

குறித்த பதிவு செய்தலின் பின், பதிவு செய்யப்பட்டதை அடையாளம் காண்பதற்காக விஷேட அனுமதிப்பத்திரம் மற்றும் இலக்கத்தகடுகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அனைவரினதும் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.


செயலாளர்

பாதுகாப்பு அமைச்சு

2019.02.28


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்