இலங்கை விமானப்படையின் புதிய தளபதி அவர்கள்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2019/06/12]
இலங்கை விமானப்படையின்
17வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட எயார் மார்ஷல் சுமங்கல டயஸ்
அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று
(ஜூன், 12) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில்
இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது, விமானப்படை தளபதி மற்றும்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்
ஒன்று இடம்பெற்றதுடன், இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில்
நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
|