மழையுடனான காலநிலை நிலவும் - வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவிப்பு
[2019/09/12]
நாட்டின்
பல பகுதிகளில் நிலவும் ஈரலிப்பான காலநிலை தொடர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு, ஊவா, மத்திய
மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு
மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான
சாத்தியம் உயர்வாகாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று
(செப்டெம்பர்,12) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மற்றும்
வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது
இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப்
பிரதேசங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி
பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள
கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்
கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல்
தென்மேற்கு வரையான திசைகளிலிருந்துவீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது
மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
மின்னல் தாக்கங்களினாலும்
பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள்
அறிவுறுத்தப்படுகின்றார்கள். |