மூலிகைத் தோட்டம் சுத்தப்படுத்தும் பணிகள்
படையினரால் முன்னெடுப்பு
[2019/09/21]
மீகொடயிலுள்ள
'ஒசு உயன' மூலிகைத் தோட்டத்தினை சுத்தப்படுத்தும் வகையிலான சிரமதானப் பணிகளை
இலங்கை இராணு வீரர்கள் குழுவினர் அம்மையில் (செப்டம்பர், 19)
மேற்கொண்டுள்ளனர். மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திடம் விடுக்கப்பட்ட
வேண்டுகோளுக்கிணங்க இச்சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கவனிப்பரட்டு
பற்றைகள் காடுகள் வளர்ந்து இருந்த பெறுமதிமிக்க இம்மூலிகைத் தோட்டம்
படையினரின் உதவியுடன் சுத்தப்படுத்தப்பட்டது.
‘சுவ கெவட்ட’, ‘சுவ கெத’
மற்றும் ‘எல்ஹென திட்டம்’ ஆகியவற்றை பராமரித்து வரும் மீகொட ஆயுர்வேத
வைத்தியசாலை நிர்வாக பிரிவினால் இராணுவத்தினரிடம் விடுக்கப்பட்ட
வேண்டுகோளுக்கிணங்க இம்மூலிகைத் தோட்டம் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன்
சுத்தப்படுத்தியுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மூலிகை
தோட்டம் ஒருநாளைக்குள் சுத்தப்படுத்தப்பட்டு உரிய வைத்தியசாலை அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி
இராணுவத்தினர் பல்வேறு சிரமதான பணிகளுகளுக்கு தமது ஒத்துழைப்பை
வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழங்காவில் விநாயகர்
முன்பள்ளி வளாகம் மற்றும் ஆனவிலண்டான்குலம் ஜேசு கிறிஸ்தவாலயம் ஆகியன
சிவிலியன்களுடன் இணைந்து இராணுவத்தினர் சிரமதான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
|