››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“ரணவிரு பயனாளர் சிறப்பு அடையாள அட்டை“ செயற்பாடுளின் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு

“ரணவிரு பயனாளர் சிறப்பு அடையாள அட்டை“ செயற்பாடுளின் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் “'ரணவிரு பயனாளர் சிறப்பு அடையாள அட்டை” திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர்,17) இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் கலந்து கொண்டார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏ.பி.ஜி கித்சிறி அவர்கள் தனது வரவேற்புரையில் 'ரணவிரு பயனாளர் சிறப்பு அடையாள அட்டை” திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விளக்கமளித்தார்.

மேலும், இந் நிகழ்வில் ரணவிரு பயனாளர் சிறப்பு அடையாள அட்டை தொடர்பான செயற்பாடுளின் முன்னேற்றம், அதன் மூலம் வழங்கப்படவுள்ள நன்மைகள் பற்றிய விபரங்கள், அதிகாரப் பூர்வமான இணையதள தொடக்கம் மற்றும் அங்குரார்ப்பண விழா தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந் நிகழ்வில், பிரதம பாதுகாப்புப் பிரதானி, இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள், ரணவிரு சேவா திணைக்களத்தின் தலைவர், பாதுகாப்பு அமைச்சினது அதிகாரிகள், முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்களப் பிரதிநிதிகள், அரச மற்றும் தனியார் துறைப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்