பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் “ரணவிரு விஷேட அடையாள அட்டை”
முன்னேற்றச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ள முப்படை
வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பல்வேறு வரப்பிரசாதங்களை
வழங்கும் “ரணவிரு விஷேட அடையாள அட்டை“ வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்
தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ.
ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் இன்று (டிசம்பர்,03) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சி (பொறியியலாளர்)
அவர்களும் கலந்து கொண்டார்.
அத்துடன் இந் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின்
செயலாளர் ஏபிஜி. கித்சிறி, முப்படைகளின் கட்டளைத் தளபதிகள், பொலிஸ் மா
அதிபர், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி, முப்படைகளின் நலன்புரி சேவைப்
பணியகங்களின் பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படை,
பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களப் பிரதிநிதிகள் உட்பட அனுசரணை
வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும்
கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
|