››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

‘விருசரா‘ வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது

‘விருசர‘ வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது

முப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கும் ‘விருசர‘ ரணவிரு விஷேட அடையாள அட்டை வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏபிஜி. கித்சிரி அவர்களின் தலைமையில் இன்று (டிசம்பர்,08) நடைபெற்றது.

இந் நிகழ்வின் போது, ‘விருசர‘ ரணவிரு விஷேட அடையாள அட்டைக்காக வழங்கப்படவுள்ள பயனாளர்களுக்கான சிறப்பு சலுகைகள், தரவு தளம், இணையதளம், ஊடக பிரச்சாரம் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களப் பிரதிநிதிகள் உட்பட ரணவிரு சேவா அதிகார சபையின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்