பாதுகாப்புச் செயலாளர் அக்குரகொட பாதுகாப்பு தலைமையக திட்டத்தை
பார்வையிட்டார்
அக்குரகொடயில் நிர்மானிக்கப்படுகின்ற பாதுகாப்பு தலைமையக
திட்டத்தின் முன்னேற்றத்தினை பார்வையிடுவதற்காக பாதுகாப்புச் செயலாளர் திரு.
கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் இன்று (டிசம்பர்,09) விஜயம் ஒன்றினை
மேற்கொண்டார்.
மேலும் இவ்விஜயத்தின்போது பாதுகாப்பு செயாலாளர், வேலையின்
முன்னேற்றம் தொடர்பாக பரிசீலனை செய்ததுடன் இத்திட்டம் பற்றியும்
சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இச்செயற்றிட்டம் பூர்த்தியடைந்தவுடன் பாதுகாப்பு அமைச்சு
மற்றும் முப்படைகளின் தலைமைகயகங்கள் ஆகியன இக்கட்டிட தொகுதிக்கு
இடமாற்றப்படவுள்ளன.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா,
பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (தொழிநுட்பம்) திரு. ஏடிஎல்பி.
சமரசிங்க, கடற்படையின் திட்ட பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் டிஎம்டி
வெட்டெவெ உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகரிகள் பலரும் கலந்து கொண்டனர்
|