கொஸ்கம- சலாவ வெடிவிபத்து தொடர்பாக ஆராய வெவ்வேறான விசாரணைகள்
அண்மையில் கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட
வெடிவிபத்தின் பின்னணி தொடர்பாக வெவ்வேறான விசாரணைகள்
மேற்கொள்ளப்படுவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலைய பேச்சாளர்
பிரிகேடியர் ஜயநத் ஜெயவீர குறிப்பிட்டார்.
இதன்பிரகாரம் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளை
உள்ளடக்கிய பாதுகாப்பு அமைச்சின் விசாரணைக்குழு, இராணுவத்தளபதியினால்
நியமிக்கப்பட்ட விசாரணை நீதிமன்றக் குழு மற்றும் குற்றப் புலனாய்வு
திணைக்களம் ஆகியன மேற்படி சம்பவம் தொடர்பாக வெவ்வேறான விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர். அத்தோடு வெடிப்பு காரணமாக இடம்பெற்ற இராணுவ வீரரின் மரணம்
தொடர்பாக நீதவான் அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கபடவுள்ளது.
வெடிவிபத்தின் பின்னணி தொடர்பாக விசாரணை அறிக்கைகள்
கிடைக்கப் பெற்ற பின்பே விபத்துக்கான காரணங்களை உறுதியாக தெரிவிக்க முடியும்
எனவும் இது தொடர்பாக தற்போது பரவிவரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்
எனவும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலைய பேச்சாளர் கேட்டுக் கொண்டார். |