››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

துரையப்பா மைதானம் நல்லிணக்கத்தின் ஒரு அடையாளமாக அமையும் –ஜனாதிபதி

துரையப்பா மைதானம் நல்லிணக்கத்தின் ஒரு அடையாளமாக அமையும் –ஜனாதிபதி

[2016/06/20]

விளையாட்டரங்கு இனம், சமயம், குளம் என்ற எல்லா பேதங்களையும் தாண்டி நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் ஒரு மத்திய நிலையமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கிலும் தெற்கிலும் உள்ள பிள்ளைகளுக்கு மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் ஒரு அடையாளமாக யாழ். துரையப்பா மைதானம் அமையும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குடையிலான உறவுகள் தொடர்பில் சில அடிப்படைவாதிகள் பல்வேறு பிழையான வியாக்கியானங்களை முன்வைத்துவருகின்றபோதும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இரண்டு நாடுகளும் மிகுந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டுவருவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள யாழ் அல்பிரட் துரையப்பா விளையாட்டரங்கை திறந்துவைக்கும் நிகழ்வில் அண்மையில் (18) முற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இவ்விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்து வடக்கிலுள்ள பிள்ளைகளுக்கு வழங்கக்கிடைத்தமை இந்திய இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்தக்கிடைத்த சந்தர்ப்பமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் தொடர்ச்சியான உதவிகள் கிடைக்கப்பெற்றுவருவதுடன், சர்வதேச ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மிகவும் முக்கியமானதாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஒரு ஜனநாயக அரசியல் தலைவரான அல்பிரட் துரையப்பா அவர்கள் மீது விடுக்கப்பட்ட துப்பாக்கிச்சூடு ஜனநாயகத்தின் மீது வைக்கப்பட்ட துப்பாக்கிச்சூடாகும் என்றும் இன்று இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் துறையப்பா விளையாட்டரங்கை மீண்டும் அபிவிருத்தி செய்து திறந்துவைப்பதனூடாக அந்த இறந்தகால நினைவுகளை அழித்து நல்லிணக்கம் தொடர்பான ஒரு புதிய பயணத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவர்களும் செய்மதி தொழிநுட்பத்தினூடாக இந்த நிகழ்வில் உரையாற்றினார். இந்திய அரசாங்கம் இலங்கையுடன் எப்போதும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்திருப்பதாக இந்தியப் பிரதமர் இதன்போது தெரிவித்தார். இலங்கையிலுள்ள எல்லா இனங்கள் மத்தியிலும் சமாதானமும் நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்பது இந்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விளையாட்டு அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டமும் இதன்போது நடைபெற்றதுடன், 5000 பாடசாலை பிள்ளைகளின் பங்குபற்றுகையுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக இந்தியாவின் புதுடில்லி நகரில் 11000 பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுகையுடன் நடைபெற்ற நிகழச்சித்திட்டமும் இங்கு செய்மதி தொழிநுட்பத்தினூடாக தொடர்புபடுத்தப்பட்டது.

ரூபா 145 மில்லியன் செலவில் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் யாழ் துரையப்பா மைதானம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே, வட மாகாண முதலமைச்சர் சி வி விக்ணேஸ்வரன். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்த, மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், பி. சரவணபவன் மற்றும் இந்திய உயரிஸ்தானிகர் வை கே சிங்ஹா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

யாழ். அல்பிரட் துரையப்பா விளையட்டரங்கு திறப்பு விழாவில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை.
இந்தியப் பிரதமர் செய்திமதி தொழிநுட்பத்தினூடாக எம்மோடு இணைந்து கொண்டிருக்கும் நிலையில் எல்லா இனங்களினதும் எதிர்காலத்திற்காக அல்பிரட் துரையப்பா விளையட்டரங்கை இன்று திறந்துவைக்க சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

குறிப்பாக இந்த விளையாட்டரங்கின் நிர்மாணப்பணிகளும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் இந்திய அரசாங்கத்தின் அனுரசரணையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நான் இந்திய பிரதமருக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவும் இலங்கை மக்களின் சார்பாகவும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இச்சந்தர்பம் இந்திய இலங்கை நட்புறவு மென்மேலும் பலமடையும் ஒரு சந்தர்ப்பமாக நான் கருதுகிறேன். குறிப்பாக இந்திய இலங்கை நட்புறவு ஒரு நீண்டகால வரலாற்றுத் தொடர்பைக்கொண்டதாகும்.

இன்று இந்த நிகழ்வைப்போன்று நாளைய தினம் எமது நாட்டில் பொசன் பௌர்ணமி தினமாகும் அது பௌத்தர்கள் என்றவகையில் எமக்கு மிகவும் முக்கியமானதொரு தினமாகும். பௌத்த தத்துவம் இந்தியாவிலிருந்து இந்த பொசன் பௌர்ணமி தினத்திலேயே எமது நாட்டுக்குக் கிடைக்கப்பெற்றது.

எமது நாட்டின் அபிவிருத்திக்காக நீண்டகாலமாக இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு எமக்கு கிடைத்துவருகிறது. அதேபோன்று இந்த நாட்டில் நீண்டகாலமாக இடம்பெற்ற யுத்ததின்போது அந்த யுத்தத்தை நிறைவுசெய்து இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் மிகப்பெரும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தமையை நான் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூறுவது அவசியமாகும்.
இந்திய இலங்கை நட்புறவில் எமது பொருளாதார வர்த்தக மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு எப்போதும் பலம்பெற்றுவருகிறது. அந்த ஒத்துழைப்புக்காக இலங்கை அரசாங்கம் மிகத்தெளிவான அர்ப்பணத்துடன் செயற்பட்டுவருகிறது. சிலபோது சில அடிப்படைவாதிகள் இது தொடர்பாக பிழையான வியாக்கியானங்களை முன்வைத்துவருகின்றனர். என்றாலும். எமது இரண்டு நாடுகளும் மிகுந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டுவருகின்றன. தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் எமது உறவுகள் பலம்பெறுவது இரண்டு நாடுகளினதும் பிராந்திய மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதாகும்.

இந்த இவ்விளையாட்டரங்கு தேசிய நல்லிணக்கத்தின் ஒரு மத்திய நிலையமாகும். இந்த விளையாட்டரங்கில் இனம், சமயம், மொழி என்ற எவ்வித பேதங்களுக்கும் இடமில்லை. அவை எல்லாவற்றையும் தாண்டி தேசிய நல்லிணக்கத்தின் மத்திய நிலையமாக கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒரு விளையாட்டரங்காகவே நான் இவ்விளையாட்டரங்கை காண்கிறேன்.

அல்பிரட் துரையப்பா அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் ஜனநாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு துப்பாக்கிப் பிரயோகமாகவே நான் கருதுகிறேன். அதேபோன்று யாழ். அல்பிரட் துரையப்பா விளையட்டரங்கு இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று வடக்கு மிக்களிடம் கையளிக்கக்கிடைத்தமையையிட்டு இலங்கை அரசாங்கம் என்றவகையில் நான் மகிழ்ச்சியடைவதுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று இந்த நிகழ்வில் 5000 பிள்ளைகள் பங்குபற்றுகின்றனர். அதேபோன்று இந்தியாவின் டில்லி நகரில் இந்த நிகழ்வில் 11000 இந்திய நாட்டுப் பிள்ளைகள் பங்குபற்றுகின்றனர்.

நட்புறவுக்கு மிகவும் பலமான ஒரு பிணைப்பைக் கொண்டுவரும் ஒரு சந்தர்ப்பமாக இதனை மகிழச்சியுடன் குறிப்பிடவேண்டும். எனவே இந்த முக்கிய சந்தர்ப்பத்திற்காக பல வழிகளிலும் அனுசரணையையும் ஒத்துழைப்பையும் வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கையின் எல்லா நிறுவனங்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரதேச மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி ஜனாதிபதி செய்தி ஊடகம்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்