பராஒலிம்பிக் போட்டியில் நாட்டுக்கு பெருமையை ஈட்டித்தந்த இராணுவ வீரர்
[2016/09/16]
ஓய்வுபெற்ற
இலங்கை இராணுவ கோப்ரல் தினேஷ் பிரியந்த ஹேரத் பிரேஸிலிலின் ரியோ
பராஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இறுதி சுற்றில் போட்டியிட்ட அவர்
58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்று
வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கஜபா படைப்பிரிவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ கோப்ரல்
தினேஷ் 2008 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மனிதாபிமான
நடவடிக்கையின் போது காயமடைந்து மருத்துவ அடிப்படையில் ஓய்வுபெற்றவர் என்பது
குறிப்பிடத்தக்கதாகும்
இவர் பராஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்ற இரண்டாவது இலங்கை
வீரர் என்பதோடு 2012 இல் லண்டன் பராஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 400
மீ T46 பங்குபற்றி பிரதீப் சன்ஜய வெண்கலப் பதக்கத்தை பெற்ற முதலாவது
பெருமைக்குரிய இலங்கை வீரர் என்பது குறிப்பிடத்தக்கதகும். |