இலங்கை விமானப்படைக்கு தேசிய உற்பத்தித்திறன் 2015ஆம் ஆண்டிற்கான “தங்க
விருது”
[2016/09/22]
தேசிய உற்பத்தித்திறன் 2015ஆம் ஆண்டிற்கான பொதுத்துறை –
திணைக்களங்களுக்கு இடையிலான வகுதிதியில் தங்க விருதுக்காக இலங்கை விமானப்படை
அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இதே பிரிவில் தேசிய
உற்பத்தித்திறன்களுக்கான தங்க விருதை இலங்கை விமானப்படை பெற்றுக்கொண்ட
அதேவேளை தங்கள் சிறந்த நடைமுறைகளினால் அடுத்த ஆண்டிலும் இவ்விருதினை
தக்கவைத்துக்கொள்ள முடிந்துள்ளது. மேலும் 2014ஆம் ஆண்டிலும் தேசிய
உற்பத்தித்திறனில் இலங்கை விமானப்படை முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை
குறிப்பிடத்தக்கது.
பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ்
நிறுவப்பட்டுள்ள தேசிய உற்பத்தித்திறன்களுக்கான செயலகம், இவ்வருடாந்த
நிகழ்வை ஏற்பாடு செய்து வருகின்றது.
தேசிய உற்பத்தித்திறன்களுக்கான செயலகத்தினால்
நியமிக்கப்படும் ஐவரைக் கொண்ட சுயாதீன குழுவானது ஒரு நிறுவனத்தின்
தலைமைத்துவம், பணியாளர்கள், செயல்முறை மேம்பாடுகள், வாடிக்கையாளர் திருப்தி
மற்றும் இறுதி அறிக்கைகள் எனும் முக்கிய தலைப்புகளின் கீழ் உற்பத்தித்திறன்
தொடர்பான எண்ணக்கருவின் பயன்பாடு தொடர்பில் மதிப்பீடு செய்கின்றது.
இவ் வருடாந்த போட்டி நிகழ்வு, முன்னைய வருடம் முழுவதும்
உற்பத்தித்திறன்களுக்கான எண்ணக்கருக்களை அனுசரித்து சிறந்த நடைமுறைகளைப்
பேணிவரும் நிறுவனங்களை மதிப்பீடு செய்கிறது. இதற்கமைய தேசிய உற்பத்தித்திறன்
2015ஆம் ஆண்டிற்கான பொதுத்துறை – திணைக்களங்களுக்கு இடையிலான பிரிவில் தங்க
விருதுக்காக பெயரிடப்பட்டுள்ளது.
|