››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள்

[2016/12/30]

2017 ஆம் ஆண்டினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வைபவம் நேற்று(டிசம்பர்.29) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

குறித்த இச்செயற்றிட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் ஊடகச் செயலாளர் திரு.ரக்கித்த ராஜப்பக்ஸ அவர்களினால் நிதி உதவி வழங்கப்பட்டது. அத்துடன் குறித்த இத்திட்டத்தின் மூலம் பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களின் 40 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

௦.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மக்கள் தொடர்பு அதிகாரி திரு.திலின வெவ்வெல்பென, திரு.பாலித்த பல்பொல, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி பிரிகேடியர் டிஏஆர். ரணவக்க மற்றும் பரிசல்களை பெற்று கொள்ள வந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்