பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சபுகஸ்கந்த மஹா வித்தியால விளையாட்டுப்
போட்டியில் பங்கேற்பு
[2017/01/20]
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன
அவர்களின் தலைமையில் மாகொல சபுகஸ்கந்த மஹா வித்தியாலயத்தின் வருடாந்த
விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் இன்று ( ஜனவரி .20) இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு வருகைதந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
அவர்கள் பாடசாலை மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதைகளுடன் பெரும்
வரவேற்பளிக்கப்பட்டது.
இங்கு உரை நிகழ்த்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்,
பாடசாலையின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிபர்,
ஆசிரியர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்தார். அத்துடன் கல்வி அமைச்சின்
உதவியுடன் பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக கல்வி
அமைச்சுடன் கலந்துரையாட உள்ளதாகவும், பியகம தொகுதியில் உள்ள சபுகஸ்கந்த மஹா
வித்தியாலத்தினை ஒரு தேசிய பாடசாலையாக தரம் உயர்த்த உள்ளதாகவும் மேலும்
தனதுரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் போது அமைச்சர் அவர்கள் வெற்றியாளர்களை
பாராட்டி பரிசில்களும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்விற்கு அரச அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெரும்
எண்ணிக்கையான பெற்றோர்களும் வருகைதந்திருந்தனர்.
மேலும் புகைப்படங்களை பார்வையிட >> |