இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வார்ட்டுத் தொகுதி
ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
[2017/02/03]
தொற்று நோய் மருத்துவமனையில் டெங்கு நோயாளர்களுக்கு என
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வார்ட்டு தொகுதி ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வைபவ ரீதியாக நேற்று (பெப்ரவரி, 02) திறந்து
வைக்கப்பட்டது.
100m x 20m பரிமாண அளவு கொண்ட இக்கட்டித்தை இராணுவத்தினர்
தயார் படுத்தப்பட்ட நாரிழை கட்டிட பொருட்களைக் கொண்டு சுமார் பத்து
நாட்களுக்குள் நிர்மாணித்ததுடன் சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான
இரும்புக்கட்டில்கள், தலையணைகள், நுளம்பு வலைகள், மேசைகள் மற்றும் ஏனைய
உபகரணங்கள் பலவற்றையும் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச
மருத்துவ அமைச்சர் கௌரவ. டாக்டர் ராஜித சேனாரத்ன, சுகாதார அமைச்சின்
அதிகாரிகள் மற்றும் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்..
|